கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, ஷிகாவ்ன் நகரில் உள்ள தனது வீட்டை 50 படுக்கைகள் கொண்ட கோவிட் -19 பராமரிப்பு மையமாக மாற்றியுள்ளார்.
கர்நாடகாவின் பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி கிடைக்காமல் தவித்துவரும் சூழலில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, ஹவேரி மாவட்டத்தின் ஷிகாவ்ன் நகரில் உள்ள தனது வீட்டை கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றியுள்ளார். ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள பசவராஜ் பொம்மையின் இல்லத்தில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமைய வளாகத்தில் இப்போது 50 நோயாளிகள் தங்க முடியும். நோயாளிகளை கவனித்துக்கொள்வதற்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களையும் அமைச்சர் நியமித்துள்ளார்.
" 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் படுக்கைகள் எனது வீட்டின் வளாகத்தில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களின் குழு கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்" என்று பசவராஜ் பொம்மை கூறினார். பொம்மை தனது குடும்பத்தினருடன் ஹுப்பல்லியில் தங்கியுள்ளார், அவர் தனது தொகுதிக்குச் செல்லும் போதெல்லாம் ஷிகான் குடியிருப்பைப் பயன்படுத்துவார்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'