’இந்து பெண்ணை திருமணம் செய்துள்ளதால் உங்களை தீர்த்துக்கட்ட இருக்கிறோம்’ என்று போனில் மிரட்டல் வந்ததாக, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ அபு ஆஸ்மியின் மகன் பர்ஹான் ஆஸ்மி புகார் கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாடி கட்சியின் தலைவராக இருப்பவர் அபு ஆஸ்மி. எம்.எல்.ஏவான இவர், ஏதாவது கருத்துத்தெரிவித்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர். இவரது மகன் பர்ஹான் ஆஸ்மி. இவர் சமாஜ்வாடி கட்சியின் இளைஞரணி தலைவராக இருக்கிறார். நடிகை ஆயிஷா தாகியாவை திருமணம் செய்துள்ள இவர், மும்பை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், ‘எனக்கு ஒரு போன் வந்தது. இந்து சேனா என்ற அமைப்பில் இருந்து பேசுவதாக கூறிய அந்த நபர், நான் இந்து பெண்ணைத் திருமணம் செய்திருப்பதால் என்னையும் என் குடும்பத்தாரையும் கொல்ல முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். ஆபாசமாக பேசிய அவர், எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் குண்டு வைத்து தகர்க்க இருப்பதாகவும் சொன்னார்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!