ரபாடா ரிட்டர்ன்: தென்னாப்பிரிக்கா மகிழ்ச்சி

ரபாடா ரிட்டர்ன்: தென்னாப்பிரிக்கா மகிழ்ச்சி
ரபாடா ரிட்டர்ன்: தென்னாப்பிரிக்கா மகிழ்ச்சி

தடைக்குப் பிறகு வேகப்பந்துவீச்சாளர் ரபாடா அணிக்கு திரும்பியுள்ளதால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி உற்சாகமடைந்துள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றியை இரு அணிகளும் பெற்றுள்ளன. மூன்றாவது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டியின்போது, வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். இதனால் கடந்த போட்டியில் ஆட ரபாடாவுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தடைக்குப் பிறகு இன்று நடக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் ரபாடா களமிறங்குகிறார். 18 டெஸ்ட் போட்டிகளில் 77 விக்கெட்டுகளை குவித்துள்ள ரபாடா, அணிக்கு திரும்பியிருப்பது தென்னாப்பிரிக்க அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com