திமுக நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டம் மாணவர்களின் நலனுக்காக நடத்தக்கூடிய நியாயமான போராட்டம் என்றும், அது சிறப்பாக நடைபெற வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “திமுக நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கைக் கண்டித்திருக்கிறேன். அவர்கள் நடத்துவது மக்கள் நலனுக்கான, மாணவர்களின் நலனுக்கான போராட்டம், மிகவும் நியாயமான போராட்டம். எனவே அது சிறப்பாக நடக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “தமிழகத்தின் காவிரிப் படுகையை பாலைவனமாக்க வேண்டும் என்ற வஞ்சக நோக்கத்தில் செயல்படுவதாக மத்திய அரசின் மீது நான் குற்றம்சாட்டுகிறேன். கடலூர், நாகை மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக அறித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனால் 45 கிராமங்கள் அழிந்துவிடும். கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன், மெரினாவில் நினைவேந்தல் போராட்டம் நடத்திய திருமுருகன் காந்தி, சேலம் மாணவி வளர்மதி ஆகியோர் மீது பொய்யான வழக்குகளையும், அடக்குமுறை சட்டங்களை ஏவுவதும் பாசிச ஆட்சி என்பதற்கான குறியீடு. தமிழர்களின் தலையில் கொள்ளி வைக்க மத்திய அரசு வருகிறது. தமிழக அரசு அதற்கு வழிவிடுகிறது” என்று வைகோ கூறினார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?