நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் விரைவில் ‘புஷ்பா’ வெளியாகவிருக்கிறது. சமீபத்தில், ஹீரோ அறிமுக டீசர் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தார் நடிகர் அல்லு அர்ஜுன். இந்நிலையில், இன்று அவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரியப்படுத்தியுள்ளார். சமீபத்தில்தான், தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்