பான் கார்டு வைத்துள்ள 7 லட்சம் நிறுவனங்கள் வருமானக் கணக்கு தாக்கல் செய்வதில்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாகவும், 2016-17ல் 6 லட்சத்து 83 ஆயிரம் நிறுவனங்கள்
கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் எழுத்து மூலம்
பதில் அளித்தார். கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்களில், ஒரு லட்சத்து 44 ஆயிரம் நிறுவனங்கள் டெல்லியிலும், 94 ஆயிரம் நிறுவனங்கள் மும்பையிலும், 63 ஆயிரம்
நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்கள் நிதி முறைகேட்டில் ஈடுபடுவதாகச் சொல்ல
முடியாது எனினும், இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறையின் கவனத்திற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!