குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
குஜராத்தில் பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் வடபகுதி மாவட்டங்களான பனஸ்கந்தா மற்றும் பதன் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மழை நீடிக்க வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். அதேபோல விமானப்படையைச் சேர்ந்த விமானங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், குஜராத் மாநிலத்தின் சூழல் குறித்து முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோருடன் அகமதாபாத் விமான நிலையத்தில் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்தினார். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகளே என்று கூறிய மோடி, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்யும் என்று தெரிவித்தார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு மத்திய அரசு ரூ.500 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்க உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி