Published : 22,Apr 2021 04:23 PM
‘என் காதலியை எப்படி சந்திப்பது?’ - இளைஞரின் கேள்விக்கு மும்பை போலீஸ் பொறுப்பான பதில்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தீவிரம் வைரலாக பரவி வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலமை கையை மீறி சென்றுள்ளது. அதன் காரணமாக தொற்று பரவல் அதிகமாக உள்ள மும்பை உட்பட சில நகரங்களில் கடுமையான விதிமுறைகள் அமல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையிலான பயணம் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பயணம் மேற்கொள்பவர்களிடம் அபாராத தொகை வசூலிப்பதோடு 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சிலரது தேவையை கருதி பயணத்திற்கு மாநில அரசு சம்மதம் சொல்லி உள்ளதாக தெரிகிறது. அப்படி பயணம் செய்ய போலீசாரிடம் அனுமதி பெற்ற ஸ்டிக்கர் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி “வெளியே சென்று என் காதலியை சந்திக்க நான் என்ன ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும்? நான் அவரை மிஸ் செய்கிறேன்” என ட்வீட் செய்து அதில் மும்பை போலீசாரையும் அவர் டேக் செய்திருந்தார்.
அந்த இளைஞரின் குசும்புத்தனமான கேள்விக்கு “இது உங்களது அவசிய தேவை என நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உங்களது தேவை எங்களின் அவசிய வகை பட்டியலின் கீழ் இல்லை.
இந்த தூரமும், பிரிவும் உங்களுக்குள் இதயங்களை மேலும் இணக்கத்தை கொண்டு வரும் என நம்புகிறோம். இப்போது நீங்கள் பூரண நலத்துடன் உள்ளீர்கள்.
We understand it’s essential for you sir but unfortunately it doesn’t fall under our essentials or emergency categories!
— Mumbai Police (@MumbaiPolice) April 22, 2021
Distance makes the heart grow fonder & currently, you healthier
P.S. We wish you lifetime together. This is just a phase. #StayHomeStaySafehttps://t.co/5221kRAmHp
பின் குறிப்பு : நீங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் இணைந்திருக்க வாழ்த்துகிறோம். இது தற்காலிகம் தான்” என மும்பை போலீஸ் ட்வீட் செய்துள்ளது.