நடிகர் அஜித் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோது அதனை வீடியோ எடுத்த பெண் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அஜித்தின் மேலாளர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த அப்பெண், தனக்கு மீண்டும் பணி கிடைக்க உதவ வேண்டும் எனவும் கோரி வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் சிகிச்சைக்காக நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது, அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த அஜித்தின் ரசிகையான சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த பர்சானா, அஜித் மருத்துவமனைக்கு வருவதை வீடியோ எடுத்துள்ளார். மேலும் அவருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். இந்தப்புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்தநிலையில் பர்சானாவை பணியிடை நீக்கம் செய்த மருத்துவமனை நிர்வாகம் பின்னர் பணியில் இருந்தே நீக்கியது. இதனால் வருமானம் இன்றி தவித்த பர்சானா, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் தனது நிலையைச் சொல்லி உதவக் கோரிக்கை வைத்தார். பின்னர் தனக்கு உதவுவதாக வாக்களித்துவிட்டு, பின் வாங்கியதாக அஜித்தின் மேலாளர் மீது காவல்நிலையத்தில் பர்சானா புகார் அளித்துள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?