நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் உறுதி செய்ய முடியாது: தலைமை நீதிபதி
அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் நம்புகிறார்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் கூறினார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோரை கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கி வருகிறது. தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார்.
தீர்ப்பில் அவர் கூறியதாவது:
பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது
இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல
ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது
மசூதியில் 1949-ம் ஆண்டில் சிலைகள் வைக்கப்பட்டன.
மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை ; அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது
தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது
தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை
பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை
அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் கருதுகிறார்கள். அதை மறுக்க முடியாது.
அதே இடத்தை இஸ்லாமியர்கள் பாபர் மசூதி என்று அழைக்கிறார்கள்.
ஆவணங்களின் படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது
மத நம்பிக்கை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படி உரிமை
பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அந்த இடம் இஸ்லாமிய கட்டுமானம் இல்லை.
அயோத்தி தான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் நம்புகிறார்கள். அதே இடத்தை பாபர் மசூதி என்று இஸ்லாமியர்க கூறுகின்றனர்
நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் உறுதி செய்ய முடியாது
1857இல் கட்டடத்தின் உள்பகுதிக்கும், வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன