தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்திய காவலரைத் தடுக்க முயன்ற, சக போலீஸ் கான்ஸ்டபிள் கையில் புல்லட் காயம் ஏற்பட்டது.
புனேவிலுள்ள சிவாஜிநகர் காவல் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் தனது சேவை துப்பாக்கியைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்திய ஒரு காவலரைத் தடுக்க முயன்ற, சக போலீஸ் கான்ஸ்டபிள் கையில் புல்லட் காயம் ஏற்பட்டது. புல்லட் காயம் அடைந்த கான்ஸ்டபிள் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்று கூறப்படுகிறது.
”இரண்டு கான்ஸ்டபிள்களுக்கும் மற்றொரு போலீஸ்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு, ஒரு காவலர் தனது சேவை துப்பாக்கியால் தன்னையே சுட்டுகொள்வதாக அச்சுறுத்தினார். இதனை தடுத்த மற்றொரு கான்ஸ்டபிள் கையில் காயம் ஏற்பட்டது என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. நிகழ்வுகளின் சரியான வரிசையை அறிந்து கொள்ளவும், சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை அறியவும் போலீசாரும் இன்னும் சிலரும் விசாரிக்கப்படவுள்ளனர் ” என்று புனே காவல்துறை மூத்தஅதிகாரி கூறினார்.