சமூகநீதி அளவுகோல் ஆனது சட்டப்படி முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் 'சமூகநீதி கண்காணிப்புக் குழு' அமைக்கப்படும் எனவும், இந்த கண்காணிப்பு குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல், முறையாக முழுமையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதோடு, இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யும் எனவும், இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் எனவும் சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள்.