மசாஜ் சென்டரில் சிறுயை பாலியல் வன்கொடுமை செய்ததாக 40 பேர் மீது உருளையன்பேட்டை போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த வாரம் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்றதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தபட்ட 10 பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு 17 வயது தான் ஆகிறது என்றும், அவரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டதாக 40 பேர் மீது உருளையான்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.