முதலமைச்சர் பதவிக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன், சரண்ஜித் சிங், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து திங்கள் கிழமை காலை முதலமைச்சராக அவர் பதவியேற்கவுள்ளார். புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங்-க்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.