இதில் 15 லட்சம் தடுப்பூசி என்ற இலக்கை தாண்டி 16லட்சத்து 43ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் ரயில் நிலையங்கள் உட்பட ஆயிரத்து 600 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரூர், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் ஏராளமானோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். செப்டம்பர் மாதத்தில் இதுவரை ஒரு கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்து 761 பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது.