ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கடலில் சுனாமி ஏற்பட்டு ராட்சத அலைகள் தாக்கின. இந்நிலையில் தற்போது இந்திய தூதரகம் அவசர எண்களை அறிவித்துள்ளது.
ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடல்நீரானது ஊருக்குள் வர தொடங்கியுள்ளதால் மாகாண வாரியாக சுனாமி எச்சரிக்கை அளவுகள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது அந்நாட்டு அரசு.