”வரிகள் இல்லைனா பாடல் இல்லை; பாடலாசிரியர்களும் உரிமை கேட்டால்?”- இளையராஜா வழக்கில் நீதிமன்றம் கேள்வி
பாடல்கள் விற்பனை மூலம் வணிகரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.