நாம் ஒரு புதிய தொழில்முனைவோர் எனில், செய்யப்போகும் தொழிலில் நிச்சயமாக அனுபவம் தேவை! மிக எளிய வழி, அதே தொழில் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் ஈட்டுவது!
தீராத தாகம்! எவ்வளவு பணம் வந்தாலும் தீராத தாகம்! உங்கள் வீட்டையல்ல, இந்த சமுதாயத்தையே மாற்றத் தேவையான அல்லது குறைந்தபட்சம் பலநூறு பேரின் வாழ்க்கையையே மாற்றத்தேவையான பணத்துக்கான ஆசை!
நமது சந்தை என்பது நமது விற்பனைப் பொருட்களுக்கான சந்தை மட்டுமேயல்ல! நம்முடையது அதன் ஒரு பகுதிதான். நாம் வாழக்கூடிய சந்தை பற்றிய மொத்தமான புரிதல் இன்னும் நாம் தொடர்ந்து பயணிக்க உதவும்!