சங்ககிரி அருகே கழுகை விரட்ட வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை உயிரிழந்த நிலையில், அண்ணன்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாளவாடி அருகே யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்து தாளவாடி அரசு மருத்துவமனையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையின்போது அரசியல் கட்சியினர் இடையே சில இடங்களில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.