"தேர்தல் வருவதால் தமிழகம் வந்து பிரதமர் மோடி நாடகம் ஆடி வருகிறார். 90 முறை தமிழகம் வந்தாலும் பாஜகவின் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது" என வைகோ காட்டமாகப் பேசியுள்ளார்.
முன்பு காங்கிரஸ் தமிழ்நாட்டை புறக்கணித்ததைப் போல் தற்போது நரேந்திர மோடி இந்தியா மற்றும் இலங்கையைப் புறக்கணித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.