திருத்தணியில் மர்மப் பொருள் வெடித்து பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் முகநூல் நண்பரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயிலின் கார்டு பெட்டியில் இருந்து புகை கிளம்பியதால் பயணிகள் இறங்கி ஓடினர். இதனால் 20 நிமிடங்கள் ரயில்கள் காலதாமதமாக செல்கின்றன.
கும்மிடிப்பூண்டி அருகே புதிய சிப்காட் பூங்கா அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், நிலத்தை கொடுக்க முடியாது என வருவாய்த் துறையினரிடம் மனு அளித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அருகே வீட்டின் முன்புறம் ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது. இதுகுறித்து மப்பேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.