தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையின்போது அரசியல் கட்சியினர் இடையே சில இடங்களில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
வாணியம்பாடி அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வாக்காளிக்க வரும் வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வாணியம்பாடி நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.