”முகம்மது முய்சு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச் சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” எனத் அந்த நாட்டு முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், மாலத்தீவு அதிபர் முய்சு தங்களின் கடன் சுமையைக் குறைக்க இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.