“ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இத்தேர்தல். நான் இதில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் இந்த திருவிழாவில் பங்கேற்க வேண்டும்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக வேட்பாளரான நடிகை கங்கனா ரனாவத்தை காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஷிரினேட் விமர்சித்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துவைக்க மறுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழிசை சௌந்தரராஜனின் ஆளுநர் பதவிக்கான ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.