தெற்கு காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஹமாஸ் படையினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போர் 27வது நாளாக தொடரும் சூழலில், காஸா நகரை முழுவதும் சுற்றி வளைத்து தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
“ஹமாஸ் அமைப்புடன் இறுதிக்கட்ட போரில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. போர் முடிய பல மாதங்கள் கூட ஆகலாம்” இஸ்ரேலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் முழுவீச்சில் போருக்கு தயாராகி வரும் நிலையில், லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் மக்கள் மையப்பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள நமது செய்தியாளர் ...