பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். காலை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் மாலை மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
“நிதிஷ்குமார் கூட்டணியிலிருந்து விலகினாலும் மக்கள் தொடர்ந்து எங்களுடன் இருக்கிறார்கள்”- என ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
நிதிஷ்குமார் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக உடனான கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
“முதலமைச்சர் என்ற அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியாத வகையில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிதிஷ்குமார் கைகளை கட்டிப்போட்டனர்” - பாஜக ஆசிர்வாதம் ஆச்சாரி