கோவையில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 81 ஆயிரம் மற்றும் வாக்காளர்கள் விவரம் அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகளை, வருமான வரித்துறை மற்றும் வணிக வரித்துறை ஆய்வுக்குப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டது.