தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக அளித்த புகாரில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய இணை அமைச்சர் மீது மதுரை சைபர் க்ரைம் காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்தை வாபஸ் பெறுவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற மலையகத் தமிழர்கள் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காணொளி உரை திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.