மதுரையில் சுற்றுலா பயணிகளின் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரத்தில், கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்கப்படுகிறதா என்று அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, 200 ரூபாய் குறைக்கப்பட மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்திருந்தது. அதன்பேரில் இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.