“ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இத்தேர்தல். நான் இதில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் இந்த திருவிழாவில் பங்கேற்க வேண்டும்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜனின் ஆளுநர் பதவிக்கான ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழிசை செளந்தரராஜன், தமது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்திருப்பதை அடுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாஜக சார்பில் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பொன்முடிக்கு அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு முதலமைச்சர் கடிதம் எழுதிய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டார்.