குடியாத்தம் அருகே மிளகாய் பொடியை தூவி நகைக்கடை ஊழியர்களிடம் 50 சவரன் தங்க நகை மற்றும் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 10 லட்சம் மதிப்பிலான 20 சவரன் தங்க நகை வெள்ளி பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.