கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்

கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்

சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,000-க்கும் மேல் பதிவாகி வரும் சூழலில், இதே நிலை நீடித்தால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்படும் என பொது சுகாதார நிபுணர் மருத்துவர் பிரதீப் கவுர் எச்சரித்துள்ளார். அதனால், மக்கள் பின்பற்ற வேண்டிய 10 வழிமுறைகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அவை:

> கூட்டம் கூடுவதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

> தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. 

> வீடு, பணிபுரியும் இடங்களில் குழு செயல்பாட்டை தவிர்க்க வேண்டும். 

> கட்டாயம் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். 

> காற்றோட்டம் இல்லாத மூடிய அறைகளில் கூட்டம் நடத்தக் கூடாது. அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு மக்கள் எந்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடக் கூடாது. 

> முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும். 

> தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 

> மூடிய அறைகளில் உணவு அருந்தக் கூடாது. 

> அனைத்து இடங்களிலும் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். 

> கொரோனா அறிகுறிகள் இருந்தால் காலம் தாழ்த்தாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றினால், 10 முதல் 14 நாட்களுக்குள் தொற்று குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் பொது சுகாதார நிபுணர் மருத்துவர் பிரதீப் கவுர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com