பிரதமர் மோடியை சந்தித்தது மறக்க முடியாத தருணம் என அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய செவிலியர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை, பிரதமர் மோடி கடந்த மார்ச் 1-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார். இந்நிலையில், இன்று காலை 2வது டோஸ் தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியை சேர்ந்த நிவேதா, பஞ்சாப்பை சேர்ந்த நிஷா சர்மா ஆகிய செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.
இதுகுறித்து நிவேதா கூறுகையில், “பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை நான்தான் செலுத்தினேன். இன்று, அவரைச் சந்திக்கவும், அவருக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி போடவும் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் எங்களுடன் பேசினார். நாங்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்” என்றார்.
photo courtesy: ANI
இதனிடையே பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “என் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டேன். வைரசை தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று. தடுப்பூசி செலுத்த தகுதி பெற்ற அனைவரும், விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
RCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி