தேர்தலுக்காக பணப்பட்டுவாடாக்கள் பலவிதம். அதில் இது ஒரு புதுவிதம் என்று கூறும் வகையிலான சம்பவம் கும்பகோணத்தில் நடந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த செவ்வாயன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்த நிலையில், திங்கட்கிழமை முதலே கும்பகோணத்தில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு மக்கள் டோக்கனுடன் வந்திருக்கிறார்கள். டோக்கனை கொடுத்து 2 ஆயிரம் ரூபாய்க்கான பொருட்களை இலவசமாக தருமாறு கூறியதால் மளிகைக்கடைக்காரர் ஷேக் அகமது அதிர்ச்சி அடைந்துள்ளார். ஒருவர் இருவர் எனில் பரவாயில்லை. அடுத்தடுத்து ஆட்கள் டோக்கனுடன் வந்ததால் எதுவும் புரியாமல் போனது மளிகைக்கடைக்காரருக்கு. டோக்கனுக்கு மளிகைப்பொருட்கள் தருவதாக யாருக்கும் தாம் உறுதி அளிக்கவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.
வருவோருக்கு பதில் கூற முடியாத நிலையில், வேட்பாளர்கள் தந்த டோக்கனுக்கும், தங்கள் மளிகைக்கடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கடையின் கதவில் நோட்டீஸ் அடித்து ஒட்டிவிட்டு கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார் இந்த மளிகைக்கடைக்காரர். பதவிக்கு வந்ததும் ஏமாற்றுவோர் மத்தியில், ஜெயிப்பதற்கு முன்பே வாக்காளர்களை போலி டோக்கன்கள் தந்து ஏமாற்றியிருக்கிறார்கள் அரசியல் கட்சியினர்
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!