கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அனுமதியின்றி வாக்குச்சாவடிகளை பார்வையிட்டதால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய மகளிரணி தலைவியான வானதி ஸ்ரீனிவாசன் சார்பில் பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்த புகார் மனுவில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் உடன் அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டதாகவும், மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும்போது, வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர்த்து வாக்குச்சாவடிகளுக்குள் யாரும் செல்லக்கூடாது என விதிமுறை உள்ள நிலையில், வாக்குப்பதிவு நடந்துக்கொண்டிருந்தபோது ஸ்ருதிஹாசன் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
Loading More post
கெஜ்ரிவால் 'நேரலை' சர்ச்சை: பிரதமர் கண்டிப்பு; வருத்தம் தெரிவித்த டெல்லி முதல்வர் அலுவலகம்
தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை