சென்னை வேளச்சேரி தொகுதியில் 70 வயது முதியவரின் வாக்கு, கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சர்கார் பட பாணியில் அந்த முதியவர் வாக்களித்தார்.
பெசன்ட் நகர் கலாசேத்ரா காலனியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் வாக்களிக்க சென்றபோது, அவரது வாக்கு பதிவாகிவிட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் வாக்களிக்க வேண்டும் என முறையிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆலோசித்த வாக்குப்பதிவு மைய அதிகாரிகள், 49 "P" முறைப்படி டெண்டர் வாக்களிக்க அனுமதித்தனர்.
49 "P" முறைப்படி அளிக்கப்படும் வாக்குகள் பொதுவாக எண்ணப்படாது. மிகக்குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி பெறும்போது மட்டுமே அந்த வாக்குகள் எண்ணப்படும். தமது 70 வயது அனுபவத்தில் இதுபோல் தமது வாக்கை, யாரும் கள்ள ஓட்டாக போட்டதில்லை என முதியவர் கிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.
Loading More post
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
“எனக்கு பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” - தோனி
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் இல்லாததே காரணமென கொதிக்கும் உறவினர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்