செஞ்சி அருகே போலீசாருக்கும் வாக்காளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள மூன்று வாக்குச் சாவடிகளில் காலையில் இருந்து பொதுமக்கள் தீவிரமாக வாக்கு செலுத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வாக்காளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை 200 மீட்டர் தூரத்தில் நிறுத்தி விட்டு வர வேண்டுமென தேர்தல் விதிமுறை உள்ளது.
இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் வயதானவர்களை வாகனங்களில் கூட்டிவந்து விட்டு வந்தனர். அப்போது வெளிமாநில போலீசார் வாகனங்களை லத்தியால் தட்டியதோடு வாகன கண்ணாடிகளை உடைத்ததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் லத்தியால் வாக்காளர்களையும் பொதுமக்களையும் அடித்து விரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நாங்கள் யாரும் வாக்களிக்க உள்ளே வர மாட்டோம் என்று வெளியே சென்றனர். சுமார் ஒருமணி நேரமாக வாக்குச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது.
Loading More post
கெஜ்ரிவால் 'நேரலை' சர்ச்சை: பிரதமர் கண்டிப்பு; வருத்தம் தெரிவித்த டெல்லி முதல்வர் அலுவலகம்
தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு
'ஒரே நாடு' என்ற உணர்வுடன் பணியாற்றுவோம்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
பிற மாநிலங்களுக்கும் உதவும் ஒரே ஆக்சிஜன் உபரி மாநிலம்! - 'கேரள மாடல்' சாத்தியமானது எப்படி?
எந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கை வசதிகள்?- முழு விவரத்தை சொல்லும் தமிழக அரசின் வலைதளம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் டெல்லி: அதிர்வூட்டும் பின்புலமும் கள நிலவரமும்!
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை