'மே 2-ம் தேதி தேர்தல் முடிவு சிறப்பாக இருக்கும்; அமைதியாகவும் ஆர்வத்துடனும் மக்கள் வாக்களித்து வருகின்றனர்' என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருகை தந்தார். பின்னர் வரிசையில் நின்று மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஓட்டுபோட்டது போட்டாச்சு. மே 2-ம் தேதி தேர்தல் முடிவு சிறப்பாக இருக்கும்; அமைதியாகவும் ஆர்வத்துடனும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்தியும் அல்ல அதிருப்தியும் அல்ல.
தோல்வி பயம் காரணமாக தேர்தலை நிறுத்த அதிமுகவினர் முயன்றனர். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது” என்று கூறினார்.
மு.க.ஸ்டாலின் வாக்குப்பதிவு செய்வதற்கு முன் தலைவர்களின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி