மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், அசாம் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவும் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு கட்டங்களாக 60 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 31 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
சுமார் 78.5 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 205 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி இடையே மும்முனைப் போட்டி காணப்படுகிறது. திரிணாமூல் - பாஜக இடையே ஆட்சியைப் பிடிப்பதற்குக் கடும் போட்டி நிலவுகிறது. மேற்கு வங்கத்தில் வரும் 10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் அடுத்தக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
அசாம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 86 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டத்தில் 337 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் சுமாா் 79.19 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில் 320 பாதுகாப்புப் படைக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பற்கு பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்