தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே இது குறித்த செய்தி தகவலாக வெளிவந்த நிலையில் தற்போது உறுதி ஆகியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்களின் பங்கு அதிகம் இருக்கின்ற சூழலில் இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்துள்ளது.
எல்ஜி நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம் ஸ்மார்ட்போன் வணிகத்தில் சந்தித்த தொடர் நஷ்டம் தான் என தெரியவந்துள்ளது. 2020இல் மட்டும் சுமார் 751 மில்லியன் அமெரிக்க டாலர்களை மொபைல் பிரிவில் இழந்துள்ளது அந்நிறுவனம்.
கூகுள், பேஸ்புக், வோக்ஸ்வேகன் உட்பட பல நிறுவனங்கள் எல்ஜியின் மொபைல் பிரிவை வாங்க ஆர்வம் செலுத்தி வந்தன. இருப்பினும் வணிக ரீதியிலான பேச்சுவரத்தையில் இறுதி முடிவு எட்டப்படாததால் அந்த முயற்சிகள் கைகூடாமல் போனது.
அதே நேரத்தில் மடிக்கும் வகையிலான ரோலபில் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் இறுதியில் வெளியட எல்ஜி திட்டமிட்டு வருகிறதாம். இருப்பினும் அதில் எந்தவித தெளிவான தகவலும் இதுவரை அறிவிக்கவில்லை. நீண்ட நாட்களாவே இந்த பணியில் அந்நிறுவனம் ஈட்டுபட்டு வந்துள்ளது.
எல்ஜி நிறுவனம் தனது பயணத்தை ஸ்மார்ட்போன் பிரிவில் நிறுத்திக் கொண்டாலும் புதிய கான்செப்டுகளை தயங்காமல் முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றது என்றென்றும் ஸ்மார்ட்போன் பிரியர்களின் மனதில் நிறைந்திருக்கும்.
Loading More post
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா வைரஸை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம் - பிரதீப் கவுர் எச்சரிக்கை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ