காயத்தில் இருந்து முழுவதுமாக மீண்டுவிட்டதன் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணியில் ஜடேஜா இடம் பெறுவார் என கூறப்படுகிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் டெல்லி அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இந்த முதல் போட்டியிலேயே ஜடேஜா களமிறக்கப்படுவார் என சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்தியாவுக்காக ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று விதமான பாரமேட் கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராக திகழ்கிறார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல் ஏரியாவிலும் ஜடேஜா கில்லி.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியின் இடம்பெற்றிருந்த ஜடேஜா டெஸ்ட் தொடரின் போது விரலில் ஏற்பட்ட காயத்தினால் அந்த தொடரிலிருந்து விலகினார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சையும் அளிக்கபட்டது. இந்த காயத்தினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியில் இணைந்த ஜடேஜா தனது பயிற்சியை தொடங்கினார்.
இந்நிலையில், டைம்ஸ் நவ் ஊடகத்துக்கு பேசியுள்ள சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் "ஜடேஜா காயத்தில் இருந்து முழுவதுமாக மீண்டுவிட்டார். வலைப்பயிற்சியில் பவுலிங், பேட்டிங் என சிறப்பாக செயல்பட்டார். அதனால் டெல்லி அணியுடனான முதல் போட்டியில் ஜடேஜா நிச்சயம் இடம் பிடிப்பார்" என கூறியுள்ளார்.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி