விம்பிள்டன் தொடரில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அறிவிப்பு! காரணம் என்ன?
டென்னிஸ் உலகின் ஆகச்சிறந்த வீரர்களில் ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர். 39 வயதான அவர் விம்பிள்டன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அண்மையில் கத்தார் ஓப்பன் டென்னிஸ் தொடரில் அவர் பங்கேற்றிருந்தார். அவரிடம் ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என சொல்லியிருந்தார். அதோடு விம்பிள்டன் தொடரிலும் விளையாடுவேன் என சொல்லியிருந்தார். இந்த நிலையில் தான் தற்போது அந்த தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்லும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒற்றையர் ஆடவர் பிரிவில் பெடரர் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை தங்கம் வென்றத்தில்லை. அந்த பதக்க கனவை நிறைவேற்றவே இந்த முடிவாம்.
கடந்த 2020 ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓப்பன் தொடரில் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு காயத்தினால் அவதிப்பட்ட அவர் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். அதனால் அமெரிக்க ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், ஆஸ்திரேலியா ஓப்பன் (2021) தொடர்களை மிஸ் செய்தார்.
இந்நிலையில், காயத்திலிருந்து மீண்ட அவர் கத்தார் ஓப்பன் தொடரில் விளையாடியது உலக செய்தியானது. “நான் முழு உடற் தகுதியுடன் விம்பிள்டன் விளையாட விரும்புகிறேன்” என சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி