குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நாளை மறுநாள் இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
லேசான நெஞ்சுவலி காரணமாக குடியரசுத் தலைவர் நேற்று முன் தினம் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் அடிப்படையில் இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் குடியரசுத் தலைவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நாளை மறுநாள் இதய அறுவை சிகிச்சை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் குடியரசுத் தலைவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் ராணுவ மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்