வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், கொரோன தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் அடுத்த சில வாரங்களில் நேச நாடுகளுக்கு படிப்படியாக தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் ஆற்றல், தேசிய தடுப்பூசி திட்டம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தடுப்பூசி வினியோகத்தை கட்டமைக்க வேண்டியிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும்போது உள்நாட்டு தேவையையும் கருத்தில் கொள்ளவேண்டி இருப்பதால் அதற்கேற்ப மாறுபடும்.
இந்தியா வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை கடந்த ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கியது. இது வரை உலகெங்கும் உள்ள 75 நாடுகளுக்கு சுமார் 60 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது. வரும் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி