பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக தேசிய அளவில் நடத்தப்படும் ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வின் ஆபிரகாம் உள்ளிட்ட 13 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிபெண்களை பெற்றுள்ளனர்.
ஜேஇஇ முதன்மை தேர்வுகளை எழுத சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பதிவுசெய்திருந்த நிலையில், தேர்வுகள் கடந்த 16ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 334 நகரங்களில் நடைபெற்றது. தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுகின்றன. ஒரே மாணவர் நான்கு முறை வரை தகுதி தேர்வை எழுதலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்து ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்வுகளுக்கு பின்னர் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ஆபிரகாம் தகுதித் தேர்வில் 100 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.
Loading More post
கொரோனா போராளிகளுக்கு ஏப்.24-க்குப் பிறகு புதிய காப்பீட்டு பாலிசி!
இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
+2 பொதுத்தேர்வு அட்டவணை 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் – தேர்வுகள் இயக்ககம்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து!
டெல்லியில் ஒருவாரம் முழு ஊரடங்கு: மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி