இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, இந்தாண்டில் முதன்முறையாக 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியபோது, கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்தியா முழு பொதுமுடக்கத்தில் இருந்தது. செப்டம்பர் மாதத்தில் உச்சம் தொட்ட நிலையில், நோய் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 26,490 பேர் குணமடைந்த நிலையில், 251 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 17 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு கோடியே 12 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
மூன்று லட்சத்து 95 ஆயிரம் பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 5 கோடியே 31 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!