ராஜஸ்தானில் தாயத்து செய்வதற்காக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள புலியின் மீசையை மூத்த வனத்துறை அதிகாரிகள் வெட்டியதாக வனத்துறை காவலர் ஒருவர் அம்மாநில முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் சர்ஸ்கா என்ற புலிகள் அதிகம் வாழும் பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ST-6 ரக புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த புலியின் மீசையை தாயத்து செய்வதற்காக மூத்த வனத்துறை அதிகாரிகள் வெட்டியதாக வனத்துறை காவலர் ஒருவர் ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெஹ்லோட்டுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பெயர் குறிப்பிடாத அந்த காவலர், ஜனவரி மாதத்திலிருந்தே புலி சிகிச்சையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த தகவலை ஒரு வனத்துறை அதிகாரி போதையில் இருந்தபோது தன்னிடம் கூறியதாகவும், போதைத் தெளிந்தபிறகு, இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என தன்னை அவர் மிரட்டியதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தை வனத்துறை அமைச்சர், டெல்லி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் வனத்துறை தலைமை அதிகாரி ஆரன்யா பவனுக்கும் அனுப்பியுள்ளார்.
Loading More post
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
“எனக்கு பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” - தோனி
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் இல்லாததே காரணமென கொதிக்கும் உறவினர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்