கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு குறைந்தது 8 முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரந்தீப் குலேரியா, நம் நாட்டில் போடக்கூடிய கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டுமே சம அளவு செயல்திறனையும் பாதுகாப்பையும் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். தடுப்பூசிகள் உற்பத்தி திறனை கருத்தில் கொண்டே வயது வாரியாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் அவற்றை செலுத்திக்கொண்டிருப்பதாகவும் ஒரே நேரத்தில் அனைத்து தரப்பினருக்கும் செலுத்துவது சாத்தியமல்ல என்றும் குலேரியா தெரிவித்தார்.
வெளிநாடுகள் பலவும் கூட இதே முறையைத்தான் பின்பற்றி வருவதாகவும் ரந்தீப் குலேரியா தெரிவித்தார். பொது மக்கள் அலட்சியமாக இருந்தது தான் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க காரணம் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!