சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. தீவிபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடை உரிமையாளர் ஆனந்த் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 15-ஆம் தேதி கொடுங்கையூரிலுள்ள பேக்கரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கான முயற்சி நடைபெற்ற போது அங்கிருந்த சிலிண்டர் வெடித்ததால் தீயணைப்பு வீரர் ஏகராஜ் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பரமானந்தம் என்பவரும் நேற்று அபிமன்யூ என்பவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று காலை கடை உரிமையாளர் ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக, தீவிபத்து தொடர்பாக கடை உரிமையாளர் ஆனந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை