மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி அமைத்துள்ள கூட்டணியில், தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் நேற்றிரவு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, இந்திய ஜனநாயக கட்சியும் சமத்துவ மக்கள் கட்சியும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
சென்னையில் நடைபெற்ற தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் சி.கே. குமரவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், தங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினர். கூட்டணியின் பெயரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை